”என் கணவருக்கு காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி”: விவேக் மனைவி உருக்கம்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் விவேக் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் நேற்று மாலை அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க, தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று விவேக்கின் வீட்டில் அவரது மனைவி அருள்செல்வி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது கணவர் விவேக் மறைந்த இந்த நேரத்தில் தனது குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்தார்.

”என் கணவருக்கு காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு அரசுக்கு நன்றி. இறுதிவரை உடனிருந்த காவல்துறைக்கும், ஊடகத்துறைக்கும் நன்றி. இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்திய கோடானுகோடி ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் அவர். ”

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது விவேக்கின் மூத்த மகள் அமிர்தநந்தினி, இளைய மகள் தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார், உதவியாளர் செல் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0a1b