“என்னை ‘மாண்புமிகு’ என அழைக்க வேண்டும்”: தமிழக ஆளுநர் உத்தரவு!

“ஆளுநரை மரியாதையுடன் அழைக்க ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். ‘மாண்புமிகு ஆளுநர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்” என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் ஆளுநரை மரியாதையுடன் அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம்.

அதற்கு பதிலாக, ‘மாண்புமிகு ஆளுநர்’ என்ற வார்த்தையை அடைமொழியாக பயன்படுத்தும்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், அயல்நாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, ‘மேதகு’ என்ற அடைமொழி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0a1