தமிழ் திரைத்துறை நடத்தும் ’கலைஞர் நூற்றாண்டு விழா’ ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

தமிழ் திரைத்துறை சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, அடுத்த (ஜனவரி) மாதம் 6ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்ததுறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து ’கலைஞர் 100’ என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்.

மேலும், மாண்புமிகு.முதல்வர் அவர்களும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இவைகளை கருத்தில் கொண்டு 24.12.2023  அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு

தமிழ் திரையுலகம்.