“டெல்லிக்கு திகைப்பூட்டிய திராவிட பேரொளி அண்ணா”: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்  சென்னை ,அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அவர்  மாலை அணிவித்து, படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!” என பதிவிட்டுள்ளார்.