15 இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா: ‘லேர்னர் சர்க்கிள்’ கொண்டாடியது!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 15 இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவை ‘லேர்னர் சர்க்கிள்’ கொண்டாடியது. 10 ஆயிரம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பாற்றல், கற்பனை வளம் மற்றும் கதை சொல்லல் திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழாவாக இது அமைந்தது.
இந்த விழாவில் கல்வி மற்றும் இலக்கியத் துறையிலிருந்து பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிலா காமிக்ஸ் நிறுவனரும், ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை காமிக்ஸ் வடிவில் மாற்றியமைத்ததற்காக பிரபலமானவருமான பி.சரவணராஜா, ஜேஎஸ் குளோபல் ஸ்கூல் முதல்வரும், ஒருங்கிணைந்த கற்றல் அணுகுமுறை ஆதரவாளருமான ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணா ரெட்டி, ஃபாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வரும், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உறுதியாக பணிபுரியும் கல்வியாளருமான ரெவரண்ட் சிஸ்டர் லிட்வின் மேரி ஆகிய அனைவரும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் பதினைந்து இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிட்டு, வெவ்வேறு இலக்கியம் மற்றும் கற்பனை வளத்துடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவற்றில் முக்கியமான புத்தகங்கள் சில…
● அத்வைதா டி. – Journey of Being Small (படப்புத்தகம்)
● அம்ருதா ஜி. – Empty Pages (வளர்பிறை கதைகள்)
● அக்ஷரா ஆர். – Twisted Destinies and Dreaded Prophecies (கற்பனை)
● ஆத்யா சூரியநாராயணன் – Mystics (கற்பனை)
● முகிலன் பாலசுந்தரம் – Code Cholera (அறிவியல் திரில்லர்)
● ஸ்ரேயா ராமன் – Sparks, Spice, and a Touch of Ice (சாகசம்)
● வைஷ்ணவி சதீஷ் குமார் – A War to Win (வரலாற்று புதினம்)
● ஷ்ரிகர் வினோத் – A Boy’s Quest for the Magical Remedy (புராணம்)

இந்த இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து பயணத்தையும், அவர்களுக்கு கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
லேர்னர் சர்க்கிள் ஆனது “Eyes of Wonder” என்ற தொகுப்பு புத்தகத்தையும் வெளியிட்டது. இதில் எட்டு இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பு, இளம் எழுத்தாளர்களின் பல்துறை திறமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சி ஆகும்.
லேர்னர் சர்க்கிள் இதுவரை 125க்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் புத்தக வெளியீட்டு விழா கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற்றது. அங்கு 42 இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிட்டனர்.
குழந்தைகளின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ‘சென்னை உத்சவ் 2025’ என்னும் இத்திட்டம் தொடர்கிறது.
இளம் எழுத்தாளர்களுக்கான போட்டி:
இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதற்கான அதன் முயற்சியின் ஒரு பகுதியாக, லேர்னர் சர்க்கிள் , உலகெங்கிலும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், “ரைட்டத்தான்” (Writathon) என்ற படைப்பு எழுத்துப் போட்டியைத் தொடங்கியுள்ளது. 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வெற்றி பெறும் படைப்புகள் ₹20,000 ரொக்கப் பரிசு வெல்லும் வாய்ப்புள்ளது. குழந்தைகளை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கும் சிறந்த பள்ளிக்கான ஊக்கப் பரிசும் வ்ழங்கப்படவுள்ளது,
வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ’ரைட்டத்தான்’ ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
மேலும் தகவலுக்கு: www.learnercircle.in