தி.மு.க. பொதுக்குழு 20ஆம் தேதி கூடுகிறது: தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்?

கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுகவின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி நீடித்துவரும் நிலையில், அதற்கான பதில் இந்த பொதுக்குழுவில் முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, உடல்நலக் குறைவுக்கு வீட்டில் இருந்தபடியே காவேரி மருத்துவமனையிலிருந்து மருத்துவ உதவி பெற்றுவரும் கருணாநிதி, மருத்துவர்களின் அறிவுரையின்படி ஓய்வெடுக்க வசதியாக,  திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.