சீரழியும் தமிழகம்: வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் சிறுவன்!

உளுந்தூர்பேட்டை வட்டம் மா.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜித்குமார். இவனது அப்பா கொளஞ்சி (வயது 45). மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் கொளஞ்சி இறந்துவிட்டார். அவருடைய இறப்பிற்காக வந்த உதவித்தொகை ரூ.12ஆயிரத்து 500. அதை அவரது மகன் அஜித்குமார் பெற்றுக்கொள்ள, கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) ரூ.3ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

சிறுவன் அஜித்குமாரிடம் ரூ.3ஆயிரம் இல்லாததால், அவன் கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கண்ணீர் மல்க தற்போது பிச்சை எடுத்து வருகிறான்.

அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை இருக்கும் இத்தகைய ஊழல் பெருச்சாளிகளால் தான் தமிழகம் சீரழிந்துவருகிறது. அந்த அயோக்கிய கிராம நிர்வாக அதிகாரி தண்டிக்கப்படும் வரை இந்த செய்தியை பகிர்வோமாக.

 சிறுவன் பிச்சை எடுக்கும் வீடியோ:

https://youtu.be/b1Tc7BLOGFo