சீனாவில் 56ஆயிரம் திரைகளில் வெளியாகிறது ‘2 பாய்ண்ட் ஒ’

0a1aலைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், நீரவ்ஷா ஒளிப்பதிவில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘2.0’.

3டி தொழில்நுட்பம் மற்றும் 4டி ஒலிநுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த (2019ஆம்) ஆண்டு மே மாதத்தில் சீனாவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது லைகா நிறுவனம்.

இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோனி, வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல், டிஸ்னி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களைத் தொடர்ந்து சீனாவில் வெளியிட்டு வரும் HY நிறுவனம், லைகாவுடன் இணைந்து ‘2.0’ படத்தை சீனாவில் வெளியிடுகிறது..

2019-ம் ஆண்டு மே மாதம் இப்படம் 10,000 திரையரங்குகளில், 56,000 திரைகளில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகும். இதில் சுமார் 47,000 திரைகள் 3டி திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுப் படங்களில் சீனாவில் மிக அதிகமாக 3டி திரையில் வெளியாகும் படமாக ‘2.0’ இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.